ஏன் எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல.. ஆனா அது நடந்துச்சு.. கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷமிருக்கும் எழுதணும்னு தோணி.. ஏகத்துக்கும் ப்ளாக்கும் கதைகளும் படிச்ச விளைவு. திடீர்னு போன வருஷம் இனி எழுதறத நிறுத்தினேன். அப்புறம் இப்போ ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பழைய டச் விட்டுப் போச்சு. அதான் மொக்கையா முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்..
அதாகப்பட்டது இப்போ எத பத்தி எழுதப்போறேன்னா... வெட்கம். அந்தக் காலத்திலேர்ந்து ஒரு நாலு மேட்டர பத்தி சொல்லுவாங்க. குறிப்பா பொண்ணுங்களுக்கு.. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. மத்தத பத்தி இப்போ கவலையில்ல. ஆனா அந்த மூணாவது மேட்டர்.. நாணம்.. வேற பேரு தான் வெட்கம். என்னமோ அத பொண்ணுங்களுக்கு மட்டும் சொந்தம்ங்கற மாதிரி பேசறாங்க... ஆனா வெட்கப்பட்ட பல ஆண்களைப் பார்த்திருக்கேன்.. மச்சான்.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு வழிவாங்கல்ல.. அது வ்ழிசல் இல்லீங்க.. வெட்கம். அதே மாதிரி கடலை.. ஜொள்ளு..இப்படி பல பேர்ல பொண்ணுங்ககிட்ட பேசும் போது அவங்க கண்ணு மின்னுமே..அது ஜொள்ளு இல்லே வெட்கம். வாயில வழிஞ்சா தான் ஜொள்ளு..
மேட்டருக்கு வருவோம். சினிமால நிறைய தமிழ் பொண்ணுங்க வெட்கப்பட்டு பார்த்திருக்கேன். ஆனா நேரில என் அதிர்ஷடமோ என்னமோ தெரியல.. இதுவரை ஒரே ஒரு பொண்ணு தான் வெட்கப்பட்டு பாத்திருக்கேன்....ஹ்ம்ம்... சரி..விடுங்க. மத்தபடி சரியாவே ஞாபகம் இல்லே... அதுவும் பெங்களூருக்கு வந்தப்புறம் வெட்கமா என்ன?னு கேக்கற அளவுக்கு எல்லோரும் இருக்காங்க.. ஆண்கள் வெட்கப்படுற அளவு கூட பெண்கள் வெட்கப்படுற மாதிரி தெரியல..
வெட்கப்படுறதும் வெட்கப்படுறதைப்பாக்கறதும் ஒரு சுகம். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கறது கண்ணுல தெரியும்.. கால் பூமியில இல்லாம ஆகாயத்துல அடியெடுத்து வைக்கும்... அப்போ இருக்கும் பாருங்க ஒரு லவ் ஃபீல்... ச்சே.. இது எதுவும் இன்னும் எனக்கு குடுத்து வைக்கல... எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கறேன்..
இப்படி இருக்கற சூழ்நிலையில சமீபத்துல நான் பார்த்த ஒரு வெட்கப்படுற சீன் ரொம்பவே ஆச்சர்யப்படுத்திடுச்சு.. கோவா படத்துல மெலன் மேரியின் வெட்கம். என்ன ஆச்சர்யம்னா... வெட்கப்படறதுன்னா என்னன்னு எப்படி சொல்லி புரிய வச்சிருப்பாங்கன்னு. ஆனா சும்மா சொல்லக்கூடாது பொண்ணு பிச்சி உதறிடுச்சு... வெட்கத்துல. அங்க ப்ரேம்ஜிக்கு பதிலா என்னைத் தான் பார்த்தேன்.. ஹிஹி. அவ்ளோ அழகா வெட்கப்பட்டது... அதுவும் தலையாட்டிக்கிட்டே.. சீரான பல்வரிசை தெரிய... அடடா... சரி... தொடச்சுக்கிட்டேன்.. நான் பார்த்தத நீங்களும் பாருங்க.. உங்களுக்கும் வெட்கம் வரும்... வர்ட்டா....
Friday, March 26, 2010
வெட்கம்ன்னா.....
Posted by மதி at 3/26/2010 12:21:00 AM 2 comments
Monday, March 22, 2010
மௌனராகங்கள்...!
Labels: மொக்கை
Posted by மதி at 3/22/2010 01:18:00 AM 7 comments
Tuesday, March 9, 2010
முகமறியா முகங்கள்
(மு.கு: இந்தக்கதையை எப்போதோ ஏதோ ஒரு கதைப்போட்டிக்காக எழுதியது. போட்டிக்கு அனுப்புவதென்றால் கொஞ்சம் சீரியஸா... தெரியாத புரியாத விஷயமா இருக்கணும்னு ஒரு வரைமுறைக்கு உட்பட்டு எழுதினேன். வழக்கம் போல பரிசு ஏதும் கிடைக்கல..ஹிஹி.. படிச்சுட்டு கொல்லுங்...அவ்வ்வ்...சொல்லுங்க)
Labels: கதை
Posted by மதி at 3/09/2010 10:31:00 PM 5 comments
Friday, February 26, 2010
விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்
ஆரம்பமே அழகாய் கேரளாவின் நீர்நிலையில் வெள்ளை வண்ண எழுத்துக்கள். Young Super Star சிலம்பரசன் என்று ஆரம்பம். ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வரும் போது ஆராவாரமான கைத்தட்டல். படம் சர்ச்சில் ஆரம்பிக்கிறது. த்ரிஷாவின் கல்யாணம். மன்னிக்க ஜெஸ்ஸியின் கல்யாணம். சிம்பு.. அவ்வ்வ்.. கார்த்திக் இருக்கிறான். அவன் பார்வையில் படம்.
Labels: விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம்
Posted by மதி at 2/26/2010 10:47:00 PM 15 comments
Thursday, February 25, 2010
பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரா...!!!
இதோ... இன்னும் சற்று நேரத்துல 12 மணியாகப் போகுது. என் இனிய சகோதரன் பாலக்குமாரின் பிறந்தநாள்.. ம்ம்.. 26 வயதாகப்போகுது. இப்போவே சொல்லிக்கறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரனே...!!!!
நானும் பாலாவும்... எங்க உறவை எப்படி சொல்றதுன்னே தெரியல. இரு வருடம் தான் வித்தியாசம் என்றாலும் சின்ன வயசிலிருந்தே அந்த அளவுக்கு சேர்ந்து விளையாடியதில்லை. இன்னமும் பசுமையாய் நினைவிருக்கும் சம்பவம். அப்போ நிறைய போட்டி பொறாமை. அப்படி ஒருமுறை திருவாரூரில் குடியிருந்த சமயம் சின்னதாய் சண்டையிட்டு படுத்திருந்த என்மேல் ஏறிவிட்டான். சண்டைப்போட்டுக் கொண்டே அவனைத் தள்ளிவிட சரியாய் கதவின் விளிம்பில் அவன் தலை மோதி ரத்தம் கொட்ட.. வீட்டில் ஒரே அமளி. அவசர அவசரமாய் டாக்டர் வீட்டுக்கு கொண்டு செல்ல எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. அதற்கப்புறம் நினைவில் இருக்கும் படி சொல்லிக்கொள்ள பெரிதாய் எந்த சம்பவமும் நினைவில் இல்லை. நான் என் நண்பர் பட்டாளங்களுடன் சுற்றுவேன். அவன் தன் நண்பர்களுடன்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் எங்கள் உறவு பலப்பட ஆரம்பித்தது. முதலில் அவனுக்கு மொபைல் வாங்கித் தந்ததிலிருந்து. அப்போது முதல் முறையாக பெங்களூருக்கு வந்திருந்தான். நான் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாள் ஆகியிருந்தது. தம்பி வருகிறான் என்றதும் தலைகால் புரியவில்லை. அண்ணனா நல்ல புள்ளையா மொபைல் அதுவும் கலர் டிஸ்ப்ளே வைத்தது, வாங்கித் தந்தேன். அப்போது ஆரம்பித்தது எங்கள் நட்பு..ஹிஹி. பல காரியங்களை என் மூலம் சாதிக்க ஆரம்பித்தான். படிக்கும் போதே யுனிகார்ன் வாங்கியதிலிருந்து வேலைக்கு சேர்ந்தபிறகும் லேப்டாப் வாங்கியது வரை. அவ்ளோ நல்ல அண்ணனா என்னைக் காட்டிக் கொள்ள வைத்தான். பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து கூத்தடிக்க ஆரம்பித்தோம். எனக்குத் தேவையானதை அவனும் அவனுக்குத் தேவையானதை நானும் வாங்கித் தர ஆரம்பித்தோம்.
என் பணத்தில எனக்காக விலையுயர்ந்த பொருள் வாங்கினா என்ன சுயநலக்காரன்னு ஊர் திட்டும். அதே பொருளை தம்பிக்கு வாங்கித் தந்தா என்ன ஒரு ஒற்றுமையான அண்ணன் தம்பின்னு பாராட்டும்.
எவ்ளோ சிம்பிள் லாஜிக்.. நீங்களும் கடைபிடிச்சுப் பாருங்க.
மறுபடியும்...
Labels: வாழ்த்து
Posted by மதி at 2/25/2010 09:43:00 PM 2 comments
Wednesday, February 24, 2010
மதிய உலா
முன்குறிப்பு: நான் செம மொக்கையான ஆளுங்க. (தீராத விளையாட்டுப் பிள்ளையில் புரட்சித் தளபதி சொல்ற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க..ஹிஹி) அப்படி தான் நிறைய பேருக்குத் தெரியும். கதையாவும் கட்டுரையாவும் இல்லாமல் ஒருவிதமான நடையில் செய்த முதல் முயற்சி. எதிர்பாராமல் இதில் உள்ள கரு பல விவாதங்களுக்கு வழிவிட்டது. மிகப்பெரிய சந்தோஷமே வயதுவித்தியாசமில்லாமல் பல விமர்சனங்களை தந்தது. (நல்லாருக்கு.. என்ன கண்றாவிடா..இது..) இப்படி பல. முக்கியமான விஷயம்... இதைப்படித்து பலர் என் வயது 45க்கும் மேல் என்று நினைத்தது தான்.. :(. மேலும் என்னுடன் வேலைப்பார்க்கும் நண்பனின் தாய் இதைப்படித்து எனக்கு போன் செய்து..இந்தகால பசங்கல்லாம் வெட்டியா ஊர் சுத்தறவங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ இப்படியெல்லாம் கூட எழுதுவியானு பாராட்டிட்டாங்க.. இன்னமும் அவங்கள பாதிச்ச விஷயம் என்னன்னு தேடிக்கிட்டு இருக்கேன். எனக்குத் தெரியல.. உங்களுக்காவது தெரியுதான்னு சொல்லுங்க...
Labels: கதை
Posted by மதி at 2/24/2010 08:55:00 AM 0 comments
Monday, February 22, 2010
வணக்கம்
அன்புடையீர்....
என்னடா.. திடீர்னு ப்ளாக் பக்கம் வந்துட்டானேன்னு பாக்காதீங்க. ரொம்ப நாளா மனத்தினுள் வெறுமை. ஏன்னே புரியாத குழப்பம். எதற்குன்னு தெரியாத தயக்கம். ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. ஏதோ பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டேனென்று. சர்தான்.. இதுவும் கடந்து போகட்டும்னு ஆரம்பிச்சது தான் இந்த ப்ளாக். இவண் மதி.
இதற்கென்று தனியான பெயர்க் காரணம்னு ஏதுமில்லை. எப்பவும் போல மனசுல சட்டென தோணின பேர் இது. எனது வழக்கமான பேரான "மொக்கை மதி"யிலிருந்து வேறுபட்டு இருக்கட்டுமேனு வச்சாச்சு. இதுல என்ன எழுதப் போறேன்.. வழக்கம் போல மொக்கையான கதையா, கவிதையா... என்னன்னு இன்னும் ஏதும் தெரியாது.. போற போக்கில மனசுல தோணினதெல்லாம் எழுதலாம்னு இருக்கேன். வழக்கம் போல எல்லோரும் படிப்பாங்கன்னு ஒரு சின்ன நம்பிக்கை தான்... தோ..பாருங்க... எங்க போனாலும் இந்த மொக்கைத் தனம் போக மாட்டேங்குது.. புரியுது.. புரியுது.. கட்டுப்படுத்திக்கறேன்..
சரி.. அப்பால சந்திப்போம்... வர்ட்டா...!!! :):):)
Posted by மதி at 2/22/2010 09:35:00 PM 4 comments
