Tuesday, April 27, 2010
உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 2
Labels: கதை
Posted by மதி at 4/27/2010 10:05:00 PM 3 comments
Friday, April 23, 2010
வினை விதைத்தவன்...
மு.கு: சத்தியமா இதில் வரும் சம்பவங்கள் உண்மையே. மேலும் இதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
கல்யாணம் ஆகாம இருந்தாலும் தான் இருக்கோம். எங்க பாத்தாலும் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசறதே காதுல விழறது. அடிக்கடி மாப்ளே கல்யாணம் நிச்சயமாயிடுச்சுடா.. மச்சான். குழந்தை பொறந்திருக்குடான்னு வரிசையா போன் வரும். நமக்கு தான் ஒன்னும் நடக்கல. அடுத்தவனுக்காவது நல்லது நடக்கட்டுமேன்னு போய் நல்லபடியா இருங்கன்னு வாழ்த்திட்டு வர்றது வழக்கம்.
இப்படி தான் அலுவலகத்துல சும்மா மொக்கை போட்டுட்டு இருந்த நேரம் பயலுவ ஒரு விஷயத்தை சொன்னாங்க. எங்க ஜீனியர் பையன் ஒருத்தன் கிட்டத்தட்ட ரெண்டு மூணு நாளா ஆள காணல. எங்கடா ஆளக்காணோமேன்னு விசாரிச்சா. பயபுள்ள பொண்ணு பார்க்க ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க. அட்றா..அட்றா.. வந்தவுடனே ட்ரீட்டுக்கு ஆட்டைய போட்டுட வேண்டியது தான்னு கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருந்தோம்.
போன வாரம் ஊருக்கு போன பய முந்தாநேத்து தான் வந்தான். அன்னிக்கு அதிசயமா வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால் பாத்து பேச முடியல. சரி.. அப்புறமா பேசிக்கலாம்னு பாத்தா ஆள் அஞ்சு மணிக்கெல்லாம் எஸ்ஸாயிட்டான். முகம் வேற சரியில்லை. சரி.. ஊருக்கு போய்ட்டு வந்த களைப்பு நாளைக்கு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆறு மணிவாக்கில் எல்லோரும் டீத்தண்ணீ குடிக்க காஃபிட்டேரியா போன போது 'என்னடா ஆச்சி.. ஆள் மூஞ்சியே சரியில்ல.. பொண்ணு புடிக்கலேன்னு சொல்லிடுச்சா என்ன' னு ஆரம்பிச்சேன்.
அப்போ பசங்க சொன்ன கதைய கேட்டு கொஞ்சம் அசந்துட்டேன். சரித்திரத்தை பன்னிரண்டு வருஷம் புரட்டிப்பார்த்தா அந்த புள்ளையாண்டான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்திருக்கான். இப்ப போல அப்பவும் வாலு. எவனையும் விடறதில்லை. பசங்க படத்துல வர்ற வில்லன் கேரக்டர் போல. சும்மா இல்லாம ஒரு நாள் கூட படிக்கற பையன் குடுமிய புடிச்சு இழுத்து வம்பிழுத்திருக்கான். அந்த பையன் அழ பெரிய கலாட்டாவாயிடுச்சு. அதுக்கப்புறம் அந்தப்பையனும் இவனும் பேசிக்கறதில்லை. வீட்டிலே இவனுக்கு செம அடி.. திட்டு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எப்படியோ படிச்சி ஒருவழியா கரை சேர்ந்து எங்க கம்பெனியில சேர்ந்துட்டான். இப்போ அப்படியே நேர் மாறா இருப்பான். அவ்ளோ சாது.
அப்படியாப்பட்டவன் பொண்ணு பாக்க வாடான்னு வீட்ல கூப்பிட்டது ஆச ஆசையா போயிருக்கான். போனது சனிக்கிழமை காலை. அன்னிக்கு பொண்ணு பார்க்க கூடாது அடுத்த நாள் தான் பாக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்போனு பார்த்து பையன் ஜாதகத்தை பார்க்கலாம்னு ஒரு ஜோசியக்காரன்கிட்ட குடுத்திருக்காங்க. அந்த நல்லவன் ஜாதகத்தைப் பார்த்துட்டு இப்போ பொண்ணு பார்த்தா அமையாது. பையனுக்கும் நல்லதில்ல. இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் பொண்ணு பாக்கணும். அதனால கொஞ்சம் தள்ளிப் போடுங்கன்னு சொல்லிட்டாப்ல..
பயந்து போன இவன் அப்பா அம்மா பொண்ணு வீட்டு சொல்லி அனுப்பிட்டாங்க. 'இப்போதைக்கு நேரம் சரியில்ல. நாலு மாசம் கழிச்சு பாத்துக்கலாம். அதுக்குள்ள உங்களுக்கு வரன் அமைஞ்சா பாத்துக்குங்கன்னு'. அதான் பையன் மூட் அவுட். அவ்ளோ தூரம் போய் பொண்ண கண்ணுலேயே காட்டலேன்னு..
நண்பன் முடிக்க...
'ஓ. அதான் காரணமா.. ஆமா இதுக்கும் அந்த பன்னிரண்டு வருஷ ப்ளாஷ்பேக்குக்கும் என்ன சம்பந்தம்?'
'இருக்கே... அன்னிக்கு இவன் குடுமிய புடிச்சு வம்பிழுத்த அந்த பையன் தான் இப்போ இவனுக்கு ஜோசியம் பாத்த ஜோசியக்காரர்.. பயபுள்ள சரியான நேரம் பார்த்து கால வாரிவிட்டுட்டான்... ஹாஹா..'
அடங்கொப்புறானே.....
நீதி: வினை விதைத்தவன்... எப்போதும் யார்கிட்டேயும் தேவையில்லாம வம்பிழுக்க வேணாம். விதியும் வினையும் எப்போ வேணும்னாலும் சுத்தி சுத்தி அடிக்கும்.
Posted by மதி at 4/23/2010 08:35:00 PM 0 comments
Sunday, April 18, 2010
உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 1
வழக்கம் போல மு.கு: நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். எழுதவே வரவில்லை. அதனால் கதையோட்டப்பிழைகளை பொறுத்தருளவும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் தலைப்பாகியுள்ளது. தலைப்பை வைத்துவிட்டு கதையை தேடிக்கொண்டிருக்கிறேன்.
Labels: கதை
Posted by மதி at 4/18/2010 11:46:00 PM 2 comments
Wednesday, April 14, 2010
பேச நல்ல டைம்..
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ரொம்ப நாளா ப்ளாக் பக்கமே வரல.. அதான். வாழ்த்து தெரிவிக்க வந்துட்டேன். சில விளம்பரங்கள் ரொம்ப அழகா இருக்கும். எப்படி தான் யோசிச்சாங்கன்னு தெரியாது. அவ்ளோ அழகா எடுத்திருப்பாங்க. அதே மாதிரி அதுல நடிச்சிருக்கறவங்களும் அப்படி நடிச்சிருப்பாங்க. செம க்யூட்டா.. அதுல எனக்கு ரொம்ப புடிச்சது த்ரீ ரோஸஸ் விளம்பரம். திவ்யா பரமேஸ்வரனோட அழகான புன்னகையில் விளம்பரம் ஜொலிக்கும்.. அந்த நெருக்கமும் அவ்ளோ அழகா இருக்கும். பேச நல்ல டைம்...
நீங்களும் பாருங்க..
இதே மாதிரி இன்னொரு க்யூட்டான விளம்பரம் மாதவன் -வித்யாபாலன் நடித்த ஏர்டெல் விளம்பரம்.
Labels: மொக்கை
Posted by மதி at 4/14/2010 07:42:00 PM 1 comments
Friday, March 26, 2010
வெட்கம்ன்னா.....
ஏன் எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல.. ஆனா அது நடந்துச்சு.. கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷமிருக்கும் எழுதணும்னு தோணி.. ஏகத்துக்கும் ப்ளாக்கும் கதைகளும் படிச்ச விளைவு. திடீர்னு போன வருஷம் இனி எழுதறத நிறுத்தினேன். அப்புறம் இப்போ ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பழைய டச் விட்டுப் போச்சு. அதான் மொக்கையா முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்..
அதாகப்பட்டது இப்போ எத பத்தி எழுதப்போறேன்னா... வெட்கம். அந்தக் காலத்திலேர்ந்து ஒரு நாலு மேட்டர பத்தி சொல்லுவாங்க. குறிப்பா பொண்ணுங்களுக்கு.. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. மத்தத பத்தி இப்போ கவலையில்ல. ஆனா அந்த மூணாவது மேட்டர்.. நாணம்.. வேற பேரு தான் வெட்கம். என்னமோ அத பொண்ணுங்களுக்கு மட்டும் சொந்தம்ங்கற மாதிரி பேசறாங்க... ஆனா வெட்கப்பட்ட பல ஆண்களைப் பார்த்திருக்கேன்.. மச்சான்.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு வழிவாங்கல்ல.. அது வ்ழிசல் இல்லீங்க.. வெட்கம். அதே மாதிரி கடலை.. ஜொள்ளு..இப்படி பல பேர்ல பொண்ணுங்ககிட்ட பேசும் போது அவங்க கண்ணு மின்னுமே..அது ஜொள்ளு இல்லே வெட்கம். வாயில வழிஞ்சா தான் ஜொள்ளு..
மேட்டருக்கு வருவோம். சினிமால நிறைய தமிழ் பொண்ணுங்க வெட்கப்பட்டு பார்த்திருக்கேன். ஆனா நேரில என் அதிர்ஷடமோ என்னமோ தெரியல.. இதுவரை ஒரே ஒரு பொண்ணு தான் வெட்கப்பட்டு பாத்திருக்கேன்....ஹ்ம்ம்... சரி..விடுங்க. மத்தபடி சரியாவே ஞாபகம் இல்லே... அதுவும் பெங்களூருக்கு வந்தப்புறம் வெட்கமா என்ன?னு கேக்கற அளவுக்கு எல்லோரும் இருக்காங்க.. ஆண்கள் வெட்கப்படுற அளவு கூட பெண்கள் வெட்கப்படுற மாதிரி தெரியல..
வெட்கப்படுறதும் வெட்கப்படுறதைப்பாக்கறதும் ஒரு சுகம். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கறது கண்ணுல தெரியும்.. கால் பூமியில இல்லாம ஆகாயத்துல அடியெடுத்து வைக்கும்... அப்போ இருக்கும் பாருங்க ஒரு லவ் ஃபீல்... ச்சே.. இது எதுவும் இன்னும் எனக்கு குடுத்து வைக்கல... எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கறேன்..
இப்படி இருக்கற சூழ்நிலையில சமீபத்துல நான் பார்த்த ஒரு வெட்கப்படுற சீன் ரொம்பவே ஆச்சர்யப்படுத்திடுச்சு.. கோவா படத்துல மெலன் மேரியின் வெட்கம். என்ன ஆச்சர்யம்னா... வெட்கப்படறதுன்னா என்னன்னு எப்படி சொல்லி புரிய வச்சிருப்பாங்கன்னு. ஆனா சும்மா சொல்லக்கூடாது பொண்ணு பிச்சி உதறிடுச்சு... வெட்கத்துல. அங்க ப்ரேம்ஜிக்கு பதிலா என்னைத் தான் பார்த்தேன்.. ஹிஹி. அவ்ளோ அழகா வெட்கப்பட்டது... அதுவும் தலையாட்டிக்கிட்டே.. சீரான பல்வரிசை தெரிய... அடடா... சரி... தொடச்சுக்கிட்டேன்.. நான் பார்த்தத நீங்களும் பாருங்க.. உங்களுக்கும் வெட்கம் வரும்... வர்ட்டா....
Posted by மதி at 3/26/2010 12:21:00 AM 2 comments
Monday, March 22, 2010
மௌனராகங்கள்...!
Labels: மொக்கை
Posted by மதி at 3/22/2010 01:18:00 AM 7 comments
Tuesday, March 9, 2010
முகமறியா முகங்கள்
(மு.கு: இந்தக்கதையை எப்போதோ ஏதோ ஒரு கதைப்போட்டிக்காக எழுதியது. போட்டிக்கு அனுப்புவதென்றால் கொஞ்சம் சீரியஸா... தெரியாத புரியாத விஷயமா இருக்கணும்னு ஒரு வரைமுறைக்கு உட்பட்டு எழுதினேன். வழக்கம் போல பரிசு ஏதும் கிடைக்கல..ஹிஹி.. படிச்சுட்டு கொல்லுங்...அவ்வ்வ்...சொல்லுங்க)
Labels: கதை
Posted by மதி at 3/09/2010 10:31:00 PM 5 comments
